Search Result
இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது புதுக்கோட்டை / ராமேசுவரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மிக்ஜாம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த நடேசன் என்பவருக்குச் சொந்தமான படகில் என்.ராமநாதன்(29), கே.முத்தாலு(55), என்.அஞ்சப்பன்(56), பி.ஆறுமுகம்(62), பி.சர்புதீன்(48) ஆகியோரும், பி.ரிவானுல்லா(46) என்பவருக்குச் சொந்தமான படகில் எ.அபுமன்சூர்(48), ஆர்.இப்ராகிம்(45), என்.அகமது(38), ஜி.கணேசன்(53) ஆகியோரும், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.டிக்சன் என்பவருக்குச் சொந்தமான படகில் எஸ்.முனியசாமி(40), பி.செந்தூரபாண்டி(24), பி.அருள்(33), எம்.தன்ராஜ்(55) ஆகியோரும் கடலுக்குச் சென்று,நேற்று முன்தினம் இரவு ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 3 படகுகளையும் பறிமுதல் செய்ததுடன், மீனவர்கள் 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் 13 பேரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அனைவரையும் வரும் 21-ம் தேதி வரை காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 8 பேர் சிறையிலடைப்பு: இதற்கிடையே, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரும் மன்னார்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 20-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் 2023 ஜனவரியிலிருந்து இதுவரை 195 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, 31 விசைப் படகுகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. FOLLOW US தவறவிடாதீர்! சென்னை வெள்ளத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்கள்: பழுதுநீக்க குறைந்தபட்சம் ரூ.2,000 தேவை திரும்பிய பக்கமெல்லாம் சாலை மறியல், போராட்டம்: மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் வராததால் விரக்தி @ சென்னை வெள்ளம் வேளச்சேரி | பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்பு மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதி WHAT’S YOUR REACTION? Excited Excited 0% Great Great 0% Unmoved Unmoved 0% Shocked Shocked 0% Sad Sad 0% Angry Angry 0% Sign up to receive our newsletter in your inbox every day! Enter your Email Address WRITE A COMMENT தமிழ் Name Email Be the first person to comment
புதுக்கோட்டை / ராமேசுவரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் ச ...View More
மிக்ஜாம் புயல் | சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை பொது விடுமுறை
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந் ...View More
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்: முழு விவரங்கள்..!
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில ...View More
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரில் காருடன் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துரிதமாக மீட்பு
பூந்தமல்லி: மாங்காடு அருகே செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீரில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குட ...View More
பெங்களூருவில் 68 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை
பெங்களூரு: பெங்களூருவில் சதாசிவநகர், எலஹங்கா, பசவேஸ்வரா நகர்,மல்லேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இய ...View More
மாயம் இல்லே.. மந்திரம் இல்லே'.. நொடிப் பொழுதில் காணாமல் போகும் பணம்!
கண் இமைக்கும் நேரத்தில் வங்கிக் கணக்கில் இருந்து காணாமல் போன ஒரு லட்சம் ரூபாய்.. எங்கு போனது அந்தப் ...View More
'விடுதலை பார்ட் 2' படத்தின் தற்போதைய நிலைமை என்ன.?: வெளியான மாஸ் அப்டேட்.!
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் 'விடுதலை பார்ட் 2'. ரசிகர்க ...View More
ஆட்டோ ஓட்டுநரின் அசாத்திய தைரியம்.! சென்னையில் சிக்கிய ரூ.1 கோடி ஹவாலா பணம்.!
சென்னையில் ஆட்டோ ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஹவாலா பணம் காவல்துறையினர் வசம் ...View More
பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைப்பது இந்து திருமண சட்டப்படி திருமணம் ஆகாது – பாட்னா உயர்நீதிமன்றம்
மணமகன் மற்றும் மணமகள் யாக குண்டத்தை சுற்றினால் மட்டும்தான் திருமணம் ஆக கருதப்படும் என்று பாடினா உயர் ...View More
மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு…விஜய்யை விட சிறந்த நடிகர் வேணுமா? – சீமான் கருத்து.!
நடிகை த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் கூறிய சர்ச்சை கருத்து குறித்த விவகாரத்தில், அவர் ஒருவர் இன உணர்வு ...View More